வாழ்க்கையை சுவாரசியமாகவும், சுவையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் பெண் அதிதி பாலன். அப்படிப்பட்டவருடைய உடல்நிலையில் ஒரு பேரதிர்ச்சி நிகழ்கிறது. பெற்றவர்களால் வீட்டை விட்டு துரத்தப்படுகிறார். திருநங்கை அஞ்சலி வரதன், அதிதிக்கு அன்பாக இருந்து அடைக்கலம் கொடுக்கிறார். நெருங்கிய தோழிகளாக மாறுகிறார்கள், ஒன்றாக வேலைக்குப் போகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அதிதி ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்ற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவருக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து, நியாயம் கேட்கிறார்கள். அங்கும் அவர் அலைக்கழிக்கப்பட அவர் எடுக்கும் முடிவும், அதன் பின் நடக்கும் சம்பவங்களும்தான் படத்தின் கதை.